வியாழன், 16 ஜூன், 2011

ஒரு நதி போல...........


உன்னை நானோ,
என்னை நீயோ,
உன்னை வேறொருவனோ,
என்னை வேறொருத்தியோ,
உன்னுடன் வாழும் ஒருவன்
இன்னொருத்தியோ,
என்னுடன் வாழும் ஒருத்தி
இன்னொருவனையோ,
முன்னொரு காலத்தில்
காதலித்து இருந்திருக்கலாம்.


காதலிப்பவர்கள் சேர்ந்து
வாழ்வதும் 
சேர்ந்து வாழ்பவர்கள்
காதலிப்பதும்
சாத்தியமில்லை இப்போதெல்லாம்.


ஆயினும் 
காதலும், வாழ்க்கையும்
நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
ரகசியங்கள் புதைந்து கிடக்கும் 
ஒரு நதி போல...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக