திங்கள், 20 ஜூன், 2011

நம் பால்யத்தின் நட்பை........


மாந்தோப்பின் மாமரத்தில்
பழுத்துக் கிடக்கும்
மாம்பழங்களை
காவல்காரனுக்குத் தெரியாமல்
பறித்துப் பகிர்ந்து கொண்ட 
மகத்தான நாட்கள்....


பள்ளிக்கு போவதாய்
பெற்றோரை ஏமாற்றி விட்டு
குறுக்குத்துறை ஆற்றில்
முங்கு நீச்சல் போட்ட 
அந்த ஈரமான தருணங்கள்....


பரீட்சைக்குப் படிப்பதாய்
சொல்லி விட்டு
டூரிங் டாக்கிஸின்
தரை மணலில் 
கற்றுக் கொண்ட 
வாழ்க்கைப் பாடம்


இப்படியாகக்
கடந்து போன 
நம் பால்ய கால நட்பு...


இரை தேடும் வலியும்
வாழ்வின் தேவைகளும் 
கிடுக்கிப்பிடிகளாய்
நம்மை நெருக்க
வேதனையுடன் பிரிந்தோம்.


இப்பொழுது
நாம் பரிமாறிக் கொள்ளும்
வெற்று எஸ்.எம்.எஸ் ஸூம்
இ மெயிலும்
காட்டி விடுமா? 
நம் பால்யத்தின் நட்பை........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக